அந்நிய செலாவணி பற்றாக்குறையால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகிறது!

Date:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மூன்றாவது கச்சா எண்ணெய் கப்பலின் கையிருப்பை இறக்க முடியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்திற்கு வாராந்தம் மத்திய வங்கி வழங்கிய பணத்தை பயன்படுத்தி, கடந்த காலங்களில் தட்டுப்பாடு இன்றி பராமரித்து எரிபொருளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஈரான்...

எப்ஸ்டீன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: ஊடகங்களை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட எப்ஸ்டீனின் போலி சடலம்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது...

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியைத்...

கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...