இன்று உலக உணவு தினம்: உணவு வீணாவதை தடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்!

Date:

நாட்டில் உணவு நெருக்கடி நிலவும் இவ்வேளையில், பஃபே முறையில் உணவு விற்பனை செய்யப்படும் இடங்களில் சுமார் 50 வீதமான உணவுக் கழிவுகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் வேளாண் விஞ்ஞானி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்தார்.

இதன்போது, இதுபோன்ற உணவு வீணாவதை தடுக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு உணவு வீணாவதை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று சர்வதேச உலக உணவு தினத்தை முன்னிட்டே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...