‘உணவு விஷம் காரணமாக’ 22 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

புத்தல , பெல்வத்த ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 22 சிறுவர்கள் உணவு விஷம் காரணமாக இன்று (ஒக்டோபர் 5) வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

காலை உணவை உட்கொண்டதன் பின்னர் குழந்தைகளின் தோல் அரிப்பு மற்றும் தோல் வெடிப்பு மற்றும் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் டி.எம். ரத்நாயக்க தெரிவித்தார்.

எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லையெனவும், இது தொடர்பான ஆரம்ப சுகாதார பரிசோதனைகளை புத்தல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொள்ளும் எனவும் புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...