‘உணவு விஷம் காரணமாக’ 22 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

புத்தல , பெல்வத்த ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 22 சிறுவர்கள் உணவு விஷம் காரணமாக இன்று (ஒக்டோபர் 5) வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

காலை உணவை உட்கொண்டதன் பின்னர் குழந்தைகளின் தோல் அரிப்பு மற்றும் தோல் வெடிப்பு மற்றும் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் டி.எம். ரத்நாயக்க தெரிவித்தார்.

எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லையெனவும், இது தொடர்பான ஆரம்ப சுகாதார பரிசோதனைகளை புத்தல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொள்ளும் எனவும் புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...