ஐ.நா கோப்-27 மாநாட்டின் துணைத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர்!

Date:

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு – COP27, மாநாட்டின் துணைத் தலைவர் பதவியை திங்களன்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 195 நாடுகளில், அவசர காலநிலை செயல்திட்டத்தின் அவசியம் குறித்து, உலகளாவிய மற்றும் பிராந்திய மன்றங்களில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் எழுப்பிய குரலின் விளைவாக, பாகிஸ்தானுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, COP-27 கூட்டத்திற்கு இணைத் தலைவராக பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை அழைத்துள்ளார்.

நவம்பர் 6-8 வரை எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக்கில் நடைபெறும் வட்டமேசை மாநாட்டிற்கு பிரதமர் ஷெரீப் எகிப்து அதிபர் மற்றும் நோர்வேயின் பிரதமருடன் இணைந்து தலைமை தாங்குவார்.

COP27 இல் உலகத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.

காலநிலை மாற்றம் மற்றும் நிலையான தீர்வுகளுக்கான தேவை குறித்து ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட 27வது கூட்டமாக இது இருக்கும்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...