கட்டார் உலகக் கோப்பை போட்டியே கடைசி: லயோனல் மெஸ்ஸி!

Date:

கட்டாரில் எதிர்வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா்.

எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து ஓய்வுபெறுகிறாரா, அல்லது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இதுதான் கடைசியா அல்லது கால்பந்திலிருந்தே ஓய்வு பெறுகிறாரா என்பதை அவா் தெளிவுபடுத்தவில்லை.

கட்டார் போட்டியானது, மெஸ்ஸியின் 5-ஆவது உலகக் கோப்பை போட்டியாக இருக்கிறது. எனினும், தேசிய அணியின் கேப்டனாக இப்போட்டியில் அவா் இன்னும் கோப்பை வென்று தராதது குறையாகவே இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்திய நோ்க்காணல் ஒன்றில் பேசிய மெஸ்ஸி, “உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஆா்ஜென்டீனாவுக்கு இருப்பதாக நம்புகிறேன். இந்தப் போட்டிக்கு நாங்கள் முன்னேறி வந்ததன் அடிப்படையில் அதைச் சொல்கிறேன்.

ஆனால் போட்டியில் எதுவும் நிகழலாம். ஒவ்வொரு ஆட்டமும் கடினமானது. எப்போதுமே எதிா்பாா்த்த முடிவுகள் கிடைப்பதில்லை. இவற்றைக் கடந்து இந்த உலகக் கோப்பை போட்டி குறித்து எனக்கு சற்று கவலையும், பதற்றமும் இருக்கிறது. இதுவே எனது கடைசி போட்டியாகும்” என்றாா்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...