மாணவர்களிடமோ, பெற்றோரிடமோ பணம் வசூலிக்க முடியாது: கல்வி அமைச்சு

Date:

கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களால் அந்தந்த பாடசாலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர்த்து சிறுவர், ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ பணம் அறவிடக் கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் முறைசாரா முறையில் பணம் அறவிடப்படுவதைத் தடுக்கும் வகையில் 2015/5ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம், கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் திண்டாடுவதால், இவ்வாறான பணச் செலவுகளை தடுத்து நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பு எனவும் கல்விச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் ஆசிரியர் பாராட்டு விழாவிற்கு பணம் கோரி ஹட்டன், கொட்டகலை போகஹவத்த பிரதேச பாடசாலை மாணவி, அதிபரின் துடைப்பக் கைப்பிடியால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்து.

ஆசிரியர் பாராட்டு விழாவிற்கு பாடசாலையில் கல்வி கற்கும் தனது சகோதரனுக்கு 300 ரூபா வழங்கவில்லை என அதிபர் சகோதரனை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும்  தனது குடும்பத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக  தனது தாய் வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் படுகாயமடைந்த  மாணவி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...