‘முட்டை தட்டுப்பாடு ஏற்படும்’ : முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

Date:

அடுத்த பண்டிகைக் காலத்தில் நாடு கணிசமான அளவு முட்டை பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் தற்போது போதுமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படவில்லை என்று   சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் முட்டை மீதான அரசின் விலை வரம்புகளின் பின்விளைவுகளால் இந்த அவலநிலை ஏற்பட்டது என்றார்.

விலைக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக, முட்டை உற்பத்தியாளர்களில் ஏறக்குறைய பாதி பேர் உற்பத்தியை நிறுத்திவிட்டனர், பலர் இறைச்சிக்காக தங்கள் கோழிகளை விற்கின்றனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...