‘முட்டை தட்டுப்பாடு ஏற்படும்’ : முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

Date:

அடுத்த பண்டிகைக் காலத்தில் நாடு கணிசமான அளவு முட்டை பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் தற்போது போதுமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படவில்லை என்று   சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் முட்டை மீதான அரசின் விலை வரம்புகளின் பின்விளைவுகளால் இந்த அவலநிலை ஏற்பட்டது என்றார்.

விலைக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக, முட்டை உற்பத்தியாளர்களில் ஏறக்குறைய பாதி பேர் உற்பத்தியை நிறுத்திவிட்டனர், பலர் இறைச்சிக்காக தங்கள் கோழிகளை விற்கின்றனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...