முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை!

Date:

முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கலைக்க  பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 3 ஆம் திகதி முதல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற நிலையில் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும்  மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான  அதிகாரிகள் தமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் போராடி வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 24 சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கொக்கலாய் வீதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் முந்நூறு முஸ்லிம் மீனவர்களும், மாத்தளன் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும்  மீனவர்களும் முல்லைத்தீவு பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று காலை 11 மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

Popular

More like this
Related

இன்றைய தினமும் வறட்சியான வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை...

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...