ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 14ஆம் திகதி உலக முட்டை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அதற்கமைய தலா 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒரு போஷாக்குப் பொதி நாளை அங்குனகொல்லபலஸ்ஸ விகாரையில் வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு (IEC – International Egg Conference) IEC – சர்வதேச முட்டை மாநாட்டில் முதன்முறையாக முட்டைகளுக்கு ஒரு சர்வதேச தினத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் உலக முட்டை தினம் பல நாடுகளாலும் கொண்டாடப்படுகின்ற போதிலும் இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை.