‘ எங்கள் கனவு உலகம் ‘ என்ற தொனிப்பொருளில் 2022ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி சார்மினி பத்திரன வழிகாட்டலில் இடம்பெற்றது.
இரத்மலானை விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியக வளாகத்தில் கடந்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது
இதன்போது விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ‘ குவன் ரந்தரு சித்தம் 2022 ‘ எனும் சித்திரப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறுவர்களுக்கும் விமானப்படை தளபதி பரிசில்களை வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவரகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.