அடிப்படை உரிமைகளை மீறாதீர்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்!

Date:

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பயன்படுத்தப்படக் கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இன்று நவம்பர் 2 ஆம் திகதி நடைபெறும் அமைதிப் பேரணிக்கு அனுமதி பெறுமாறு பொலிசார் முறையற்ற விதத்தில் அறிவுறுத்தியதாக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் செய்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமை ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் மிக உயர்ந்த சட்டம் என்றும், அடிப்படை உரிமைகளை மீறுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துக்காட்டியது.

மேலும் அந்த அறிக்கையில், பொது பாதுகாப்பு அமைச்சருக்கு அக்டோபர் 28 அன்று மனித உரிமை ஆணையம் வழங்கிய பரிந்துரைகள் மீது காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கூறப்பட்டுள்ளது.

இந்த பேரணியை கண்காணிப்பதற்காக ஆணைக்குழு  அதிகாரிகள் குழுவொன்று இன்று அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...