அடிப்படை உரிமைகளை மீறாதீர்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்!

Date:

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பயன்படுத்தப்படக் கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இன்று நவம்பர் 2 ஆம் திகதி நடைபெறும் அமைதிப் பேரணிக்கு அனுமதி பெறுமாறு பொலிசார் முறையற்ற விதத்தில் அறிவுறுத்தியதாக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் செய்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமை ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் மிக உயர்ந்த சட்டம் என்றும், அடிப்படை உரிமைகளை மீறுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துக்காட்டியது.

மேலும் அந்த அறிக்கையில், பொது பாதுகாப்பு அமைச்சருக்கு அக்டோபர் 28 அன்று மனித உரிமை ஆணையம் வழங்கிய பரிந்துரைகள் மீது காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கூறப்பட்டுள்ளது.

இந்த பேரணியை கண்காணிப்பதற்காக ஆணைக்குழு  அதிகாரிகள் குழுவொன்று இன்று அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...