அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி

Date:

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 10 பேரைக் கொன்றுள்ளார்.

அதே கடையின் கடை மேலாளர் என நம்பப்படும் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு செய்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிதாரியும் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். மேலும் பலர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வெர்ஜீனியா மாநில செனட்டர் லூயிஸ் லூகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது மாவட்டத்தில் உள்ள வெர்ஜீனியாவின் Chesapeake நகரின் வால்மார்ட் அங்காடியில் நடந்த அமெரிக்காவின் சமீபத்திய வெகுசன துப்பாக்கிச் சூடு சம்பவம் என் இதயத்தை நொறுக்கியது.

நம் நாட்டில் பல உயிர்களை பறித்த இந்த துப்பாக்கிச் சூடு வன்முறை தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் வரை நான் ஓய மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...