இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் வைத்தியசாலையில்!

Date:

அதிவேகமாக ஓடிய இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (நவம்பர் 2) காலை 7.30 மணியளவில்  நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் தனியார் பஸ் ஒன்றின் சாரதியும் அடங்குகிறார்.

குறித்த வீதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வளைவு ஒன்றிற்கு அருகாமையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இரண்டு பேரூந்துகளும் அதிவேகமாக பயணித்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இருந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...