இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் வைத்தியசாலையில்!

Date:

அதிவேகமாக ஓடிய இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (நவம்பர் 2) காலை 7.30 மணியளவில்  நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் தனியார் பஸ் ஒன்றின் சாரதியும் அடங்குகிறார்.

குறித்த வீதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வளைவு ஒன்றிற்கு அருகாமையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இரண்டு பேரூந்துகளும் அதிவேகமாக பயணித்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இருந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...