ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பிணையில் வெளிவந்த நபர் படுகொலை!

Date:

மட்டக்குளி பகுதியில் இன்று (நவம்பர் 28)   ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாகனத்தில் வந்த இருவர் குறித்த நபரை வெட்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நாம் வினவிய போது, ​​இதுவரையில் அவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதை உறுதிப்படுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...

‘சிசு செரிய’ சேவையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...