எல்.ரீ.ரீ.ஈ, ஈஸ்டர் குற்றச்சாட்டுகள் விசாரணைகளை துரிதப்படுத்த தீர்மானம்!

Date:

விடுதலைப் புலிகள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்புப் படையினரின் தடுப்புக் காவலில்  உள்ளவர்கள் மீதான விசாரணைகளை விரைந்து முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சுக்கு ஜனாதிபதி அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில்,  சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நீதி அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த வாரம் கலந்துரையாடி இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அடுத்த ஆண்டுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். .

Popular

More like this
Related

AI பாதக விளைவுகளிலிருந்து கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் கட்டமைப்பு தேவை: டெல்லியில் ஜனாதிபதி அநுர உரை

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு...

எப்ஸ்டீன் வழக்கு: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது.

பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று ...

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற முதல் தராவிஹ் தொழுகை.

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகக் கருதப்படும் பலஸ்தீனத்தின் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமழான்...

சீன ரோபோவை இந்திய கண்டுபிடிப்பு எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய கல்கோடியாஸ் பல்கலைக்கழகம்..!

ஒரு பெரிய AI உச்சி மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ நாயை...