சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய உள்ளூராட்சி சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை!

Date:

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை உறுப்பினர் சசி ஹெட்டியாராச்சி நடத்திய இந்த போராட்டத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தங்கள் கட்சி இராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அரசாங்கம் சீனாவுடனான கடன் விவகாரங்களை இராஜதந்திர உறவுகளின் மூலம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் ரங்கே பண்டார கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு என்பது நிதி அமைச்சரின் பிரச்சினையே தவிர பிரதேச சபை உறுப்பினரின் பிரச்சினை அல்ல என்றும் பிரதேச சபை உறுப்பினரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கட்சி விரைவில் தீர்மானிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைக்குமாறு சீனாவைக் கோரி கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...