‘டேட்டா’ கட்டணங்கள் அதிகரிப்பால் மக்களுக்கு பெரும் பாதிப்பு: நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Date:

கையடக்கத் தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இன்று பலர் தொலைக்காட்சி பார்க்கிறார்கள், பாடல்களை கேட்கிறார்கள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் பெரும்பாலும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டேட்டா  மூலம் கல்வியைப் பெறுகிறார்கள் எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிப்பு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, எனவே கையடக்க தொலைபேசி கட்டணங்கள் மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் கவனத்தை செலுத்துமாறு ஊடகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...