பெற்றோர் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்கள் உணவை குறைக்கின்றனர்!

Date:

இலங்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்களின் உணவை குறைக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

தங்கள் பிள்ளைகளிற்கு வழங்குவதற்காக பெற்றோர்கள் தங்கள் உணவை குறைக்கின்றனர் என உலக உணவுதிட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநி அப்துல் ரஹீம் சித்தீக் தெரிவித்துள்ளார்.

உணவுப்பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளமை, வேலை இழப்புகள், வருமானம் குறைந்துள்ளமை ஆகியன மில்லியன் கணக்கான மக்களிற்கு சத்தான உணவு கிடைப்பது சாத்தியமற்றதாக்கிவருகின்றன.

பிரான்ஸ் தக்க தருணத்தில் வழங்கியுள்ள இந்த உதவிக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் சிறுவர்கள் மந்தபோசாக்கிலிருந்து விடுபடுவதற்கு இந்த உதவி உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பகுதிகளில் சிறுவர்களை சென்றடைவதற்காக உலக உணவு திட்டம் குழந்தை நல மருத்துவர்களின் கல்லூரியுடன் இணைந்து செயற்படும், எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முழந்தாளிட்டுக் கட்டப்பட்ட குளோபல் சுமுத் புளோட்டிலா ஆர்வலர்கள்: இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இலங்கை கண்டனம்.

காசா பகுதிக்கு ஆதரவாகச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவினர்...

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

எதிர்வரும் 2026 மே 30 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள வெசாக் புண்ணிய தினத்தை...

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை: விசிக, முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்படும் முக்கிய பதவிகள்.

விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர்...

இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் இரகசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மையங்கள் : வெளிநாட்டவர்கள் கைது

இரத்மலான சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்...