வடமேற்கு துருக்கியில் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

Date:

துருக்கியின் இஸ்தான்புல் நகரம், தலைநகர் அங்காரா மற்றும் பிற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேநிலையில் துருக்கியின் வடமேற்கு டஸஸ் மாகாணத்திலும் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

புதன்கிழமை அதிகாலை 4:08 மணிக்கு   ஏற்பட்ட நிலநடுக்கம், கோலியகா மாவட்டத்தில், டஸ்ஸிலிருந்து வடமேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம், தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இப்பகுதியில் 70 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து மக்கள் பலர் பீதியுடன் கட்டிடங்களை விட்டு வெளியேறியதுடன் அப்பகுதியில் மின்சாரமும்  துண்டிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....