அதிரடி ஆட்டத்தால் ஆஜன்டீனாவை கதிகலங்க வைத்து வெற்றியை சுவைத்தது சவூதி அணி!

Date:

அதிரடி ஆட்டத்தால் ஆஜன்டீனாவை கதிகலங்க வைத்து வெற்றியை சுவைத்தது சவூதி அணி. SA-2 , AR-1

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆர்ஜென்டீனாவை 2-1 எனத் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது சவூதி அரேபியா.

ஆர்ஜென்டீனா – சவூதி அரேபியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது.

முதல் 10 நிமிடத்துக்குள் பெனால்டி மூலமாக கோல் அடித்தார் பிரபல நட்சத்திரம் மெஸ்ஸி.

இதனால் ஆர்ஜென்டீனா 1-0 என முன்னிலை பெற்றது. நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் கோலடித்த முதல் ஆர்ஜென்டீனா வீரர் என்கிற பெருமையை மெஸ்ஸி பெற்றார் மெஸ்ஸி. முதல் பாதி முடிவில் 1-0 என முன்னிலையில் இருந்தது ஆர்ஜென்டீனா.

2-வது பாதியில் நிலைமை மாறியது. 48-வது நிமிடத்தில் சவூதி அரேபியா கோலடித்து சமன் செய்தது.

53-வது நிமிடத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சலீம் அல் டாசாரி கோல் அடித்து சவூதி அரேபியா 2-1 என முன்னிலை பெற உதவினார்.

கடைசியில் கோலடிக்க மிகவும் முயற்சி செய்தது ஆர்ஜென்டீனா. இறுதியில் 2-1 என உலகின் 3-வது சிறந்த அணியான ஆர்ஜென்டினாவை வென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது தரவரிசையில் 51-வது இடத்தில் உள்ள சவூதி அரேபிய அணி.

Popular

More like this
Related

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை...

இரத்தினபுரி -குருவிட்ட சிறைச்சாலை மோதல்- 2 பேர் உயிரிழப்பு – 4 கைதிகள் காயம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர்...