அரசாங்கம் ஒரு நாளைக்கு 1,050 கோடி ரூபாயை கடன் வாங்குகிறது!

Date:

இலங்கை அரசாங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தினமும் 1,050 கோடி ரூபாவை உலகநாடுகளிடம் கடனாகப் பெற வேண்டியுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்று பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இந்த ஆண்டு அரசின் வருமானம் 653 கோடி என்றும், அரசின் செலவு 1705 கோடி என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி அடுத்த ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 950 கோடி ரூபாவாக இருக்கும் என தெரிவித்த அத்துகோரள, அடுத்த வருடத்தில் அரசாங்கத்தின் செலவு 2160 கோடி ரூபாவாக அதிகரிக்குமெனவும் தெரிவித்தார்.

வரி வசூல் அதிகரிப்பால் அடுத்த ஆண்டு அரசின் வருமானம் அதிகரிக்கும், அடுத்த ஆண்டு ஒரு நாளில் அரசாங்கத்தின் கடன் தொகை 1364 கோடியாக அதிகரிக்கும்.

அரசாங்கத்தின் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாகவும், நிதிக் கொள்கை எவ்வாறு தவறான திசையில் செல்கிறது என்பதை இது காட்டுவதாகவும் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அரசாங்கம் எடுத்த கடன் தொகை 473 ரூபாவாகும். கடந்த ஆண்டு 371 ரூபாயாக இருந்தது.

அடுத்த வருடம் ஒரு நபருக்கு அரசாங்கம் எடுக்க வேண்டிய கடன் தொகை 609 ரூபாயாக அதிகரிக்கும் என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...