இன்று முதல் ஃபைசர் தடுப்பூசி பெறமுடியாது!

Date:

ஃபைசர் தடுப்பூசியை இன்று முதல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6 லட்சம் பைசர் தடுப்பூசிகள் நேற்றைய தினத்துடன் காலவதியானமையே இதற்கான காரணம் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 பரவக்கூடிய அதிக அவதானமிக்க 60வயதுக்கு மேற்பட்ட 27 லட்சம் பேர் உள்ளனர். எனினும், இரண்டு லட்சம் பேரே பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், காலாவதியான பைசர் தடுப்பூசிகளை விரைவில் அழிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று உறுதியான 17 பேர் அடையாளங் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 70 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 காரணமாக நேற்று முன்தினம் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...