எல்.ரீ.ரீ.ஈ, ஈஸ்டர் குற்றச்சாட்டுகள் விசாரணைகளை துரிதப்படுத்த தீர்மானம்!

Date:

விடுதலைப் புலிகள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்புப் படையினரின் தடுப்புக் காவலில்  உள்ளவர்கள் மீதான விசாரணைகளை விரைந்து முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சுக்கு ஜனாதிபதி அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில்,  சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நீதி அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த வாரம் கலந்துரையாடி இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அடுத்த ஆண்டுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். .

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...