எல்.ரீ.ரீ.ஈ, ஈஸ்டர் குற்றச்சாட்டுகள் விசாரணைகளை துரிதப்படுத்த தீர்மானம்!

Date:

விடுதலைப் புலிகள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்புப் படையினரின் தடுப்புக் காவலில்  உள்ளவர்கள் மீதான விசாரணைகளை விரைந்து முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சுக்கு ஜனாதிபதி அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில்,  சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நீதி அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த வாரம் கலந்துரையாடி இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அடுத்த ஆண்டுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். .

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில், 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...