ஓமானில் ஆள் கடத்தல் மோசடி குறித்து மனுஷவின் விளக்கம்!

Date:

ஆள் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரி இலங்கை வந்தவுடன் கைது செய்யப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

“இந்த விடயத்தை மேலும் விசாரிக்க சில அமைச்சக அதிகாரிகளை காவல்துறையினருடன் நாங்கள் அனுப்பியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

ஓமான் மற்றும் டுபாயில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்களுடைய வேலைவாய்ப்பு முகவர்களால் ஏமாற்றப்பட்ட 140க்கும் மேற்பட்ட இலங்கையர்களும் விரைவில் கவனிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் ஆள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் வெளியான ஊடக அறிக்கைகளும் இந்த ஊழலை வெளிக்கொணர உதவின. இந்த கடத்தலுக்கு பின்னணியில் இருந்த ஒரு பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்,

இலங்கை வீட்டுப் பணியாளர்களை  அனுப்புவதை இடைநிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...