ஓமானில் ஆள் கடத்தல் மோசடி குறித்து மனுஷவின் விளக்கம்!

Date:

ஆள் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரி இலங்கை வந்தவுடன் கைது செய்யப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

“இந்த விடயத்தை மேலும் விசாரிக்க சில அமைச்சக அதிகாரிகளை காவல்துறையினருடன் நாங்கள் அனுப்பியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

ஓமான் மற்றும் டுபாயில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்களுடைய வேலைவாய்ப்பு முகவர்களால் ஏமாற்றப்பட்ட 140க்கும் மேற்பட்ட இலங்கையர்களும் விரைவில் கவனிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் ஆள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் வெளியான ஊடக அறிக்கைகளும் இந்த ஊழலை வெளிக்கொணர உதவின. இந்த கடத்தலுக்கு பின்னணியில் இருந்த ஒரு பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்,

இலங்கை வீட்டுப் பணியாளர்களை  அனுப்புவதை இடைநிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

AI பாதக விளைவுகளிலிருந்து கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் கட்டமைப்பு தேவை: டெல்லியில் ஜனாதிபதி அநுர உரை

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு...

எப்ஸ்டீன் வழக்கு: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது.

பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று ...

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற முதல் தராவிஹ் தொழுகை.

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகக் கருதப்படும் பலஸ்தீனத்தின் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமழான்...

சீன ரோபோவை இந்திய கண்டுபிடிப்பு எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய கல்கோடியாஸ் பல்கலைக்கழகம்..!

ஒரு பெரிய AI உச்சி மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ நாயை...