ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் அதிகாரியை நாட்டிற்கு அழைக்க தீர்மானம்!

Date:

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் தொழிலுறவு பிரிவின் அதிகாரியை உடனடியாக நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் குறித்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலுக்காக ஓமானுக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை தொடர்ந்தே அவர் நாட்டிற்கு அழைக்கப்படவுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சில விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...