காதிகளாக பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!

Date:

காதி நீதிபதிகளாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற முஸ்லிம் பெண்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சட்டத்தரணி நுஸ்ரா சாரூக் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து இரண்டு முஸ்லிம் பெண்களால் குறித்த இருபதவிகளுக்கும் விண்ணப்பிக்க முடியுமான வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டஅடிப்படை உரிமை மீறல் மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்ட தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது காதிகளாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் மௌலவிகள், மற்றும் ஆண் சட்டத்தரணிகள், பட்டதாரிகள், நியமிக்கப்படுகின்றதாகவும்  இதனால் தமது அடிப்படை உரிமை மீறப்படுகின்றது என சில பெண்கள் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை உச்சச் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதேவேளை, நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை பரிசீலனை செய்தது.

பரிசீலனையின் பின்னர், மனுக்களை விசாரணைக்கு ஏற்காது நிராகரிப்பதாக குறித்த நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.

காதி நீதிபதிகளாக பெண்களுக்கு விண்ணப்பிக்க உள்ள தடையை நீக்கி உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்த இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக நீதிச் சேவை ஆணைக் குழுவின் தலைவர், அதன் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இந் நிலையில், மனுக்களை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், அவற்றை விசாரணைக்கு ஏற்காது நிராகரித்தது.

தற்போது தடைமுறையில் இருக்கும் (MMDA) முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் பெண்களுக்கு காதிகளாக நியமிக்கும் வாய்ப்பு சட்ட ரீதியாக இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...