சிறைகளில் அதிக கைதிகள்: போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் பெரும்பாலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைத்து வைக்க முடியும்.

எனினும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் தற்போது அதிகபட்ச கொள்ளளவை விட இருமடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில சிறைச்சாலைகள் அதன் கொள்ளளவை 300% தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக அதிகரித்து, நவம்பர் 25 வரை நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 26,000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 74% பேர் என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 4,600 (34%) அதே சமயம் அதே குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்களின் எண்ணிக்கை 8,700 (65%) ஆகும்.

சிறைச்சாலையில் உள்ள பெரும்பாலான கைதிகள், 62% சந்தேகநபர்கள் என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தரவுகளின்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை மொத்த கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 50% ஐ தாண்டியுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு கணக்குகளில்!

2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர்...

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்!

இன்று (31) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...