சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய உள்ளூராட்சி சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை!

Date:

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை உறுப்பினர் சசி ஹெட்டியாராச்சி நடத்திய இந்த போராட்டத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தங்கள் கட்சி இராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அரசாங்கம் சீனாவுடனான கடன் விவகாரங்களை இராஜதந்திர உறவுகளின் மூலம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் ரங்கே பண்டார கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு என்பது நிதி அமைச்சரின் பிரச்சினையே தவிர பிரதேச சபை உறுப்பினரின் பிரச்சினை அல்ல என்றும் பிரதேச சபை உறுப்பினரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கட்சி விரைவில் தீர்மானிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைக்குமாறு சீனாவைக் கோரி கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்....

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் மழை

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...