தனுஷ்க இரண்டாவது முறையாக பிணை கோரினார்!

Date:

தற்போது அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் காவலில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி,  மனுவை நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 8 ஆம் திகதி பரிசீலிக்க உள்ளது.

இதற்கு முன் நவம்பர் 7 அன்று டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் மஜிஸ்திரேட் ராபர்ட் வில்லியம்ஸால் அவரது ஆரம்ப பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னர், அவரை சிட்னியில் உள்ள தடுப்புக்காவல் நிலையத்திற்கு அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

சிட்னி நகரின் கிழக்கு பகுதியில் தனுஷ்க குணதிலக்க தம்மை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 29 வயதான பெண்ணொருவர் சிட்னி பொலிஸாரிடம் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...