தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்க் கட்சிகள் மூன்று விடயங்களை அடையாளப்படுத்துகின்றன!

Date:

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் இரண்டு மாகாணங்களிலும் நில அபகரிப்புச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய மூன்று பிரதான பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளன.

காணிகள் கூடிய விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக தற்போதைய அதிகாரப்பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளை உடனடியாக அமுல்படுத்தி அதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தி புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியும்.

கடந்த வெள்ளிக்கிழமை (25) வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முதல் சுற்று கலந்துரையாடலின் போது மேற்கண்ட விடயங்கள் அடையாளம் காணப்பட்டது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,
‘வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். இது தொடர்பாக ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளோம். உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய மூன்று முக்கிய பிரச்சினைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

இரண்டு மாகாணங்களிலும் நில அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும், அத்தகைய காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், மாகாண சபைத் தேர்தலை நடத்தி அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளை அமுல்படுத்த வேண்டும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்படி, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கத்துக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை அவதானிக்க மூன்றாம் தரப்பு பிரதிநிதி ஒருவர் முன்னிலையாக வேண்டும் என இந்த சந்திப்பின் போது ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, கொழும்பில் உள்ள அதன் தலைவர் எம்.பி.ஆர்.சம்பந்தனின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் பங்கேற்குமாறு வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் எம்.பி.செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த வாரம், வரவு செலவுத் திட்ட உரையின் போது பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வரவு செலவுத் திட்டம் 2023 முடிவடைந்ததன் பின்னர் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் நீண்டகால தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...