பங்களாதேஷ் தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பின்ஷிப் போட்டிக்கு புத்தளத்தை சேர்ந்த வீரர்கள் மூவர் தெரிவு!

Date:

எதிர்வரும் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெறும் நான்காவது தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பின்ஷிப் போட்டி 2022 இல் புத்தளத்தைச் சேர்ந்த ஸெபக்தக்ரோ வீரர்கள் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Amateur Sepaktakraw Association of Sri Lanka (ASTASL) அனுப்பி வைத்த உத்தியோகபூர்வ கடிதம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் ஐ.ஏ. நஜீம் அவர்களின் பார்வைக்கு இன்று வழங்கப்பட்டது.

இலங்கை ஸெபக்தக்ரோ அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட வீரர்களான சகீ அஹமட் அம்ஜுதீன், அதீப் ஹஸன் மற்றும் அஸ்ஹார் ஹுஸைன் (இரட்டை சகோதரர்கள்) ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்களாவர்.

மேற்படி உத்தியோகபூர்வ கடிதம் பார்வைக்கு வழங்கப்பட்டபோது தனது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் பாடசாலை சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்த அதிபர் நஜீப் அவர்கள், மேலதிக ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் பங்களாதேஷ் பயணத்துக்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு பாடசாலை மட்டங்களில் நிதியுதவியை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு புத்தளம் ஸெபக்தக்ரோ விளையாட்டுக் கழகமான (Kumpulan Melayu Puttalam) முகாமையாளர் சகோதரன் ஷிப்லி மர்ஜான் கலந்துகொண்டார்.

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபருக்கும் பாடசாலை முகாமைத்துவத்துக்கும் ஆட்ட வீரர்களும்  கழக முகாமையாளரும் தமது நன்றியைத் தெரிவித்தார்கள்.

Popular

More like this
Related

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...