பல்கலைக்கழக மாணவர்களின் முதன்மை நோக்கமானது கல்வியை விரைவில் முடித்து சமூகத்திற்கான தமது பொறுப்பை நிறைவேற்றுவதே என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் பல்கலைக்கழக கல்விக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தாலும், இலங்கை மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் முதல் பட்டத்தை பெறுவது பெரும் பாக்கியம் எனவும் அவர் கூறினார்.
மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் படிப்பை முடிக்காமல் 8 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கியிருப்பதால், புதிய மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்கின்றனர், என்றார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.