போராட்டத்திற்கு செல்ல வேண்டாம்: ஹிருணிகாவுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Date:

(file photo)

இன்று நடைபெறவுள்ள பாரிய போராட்டத்திற்கு பொலிஸார் இடமளிக்க மாட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு பொலிஸார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதன்படி, மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வரும் இந்த பேரணி காரணமாக ஏனைய பிரஜைகள் சுதந்திரமாக பயணிக்கும் உரிமை தடைப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர்  கே.ஈ.என்.தில்ருக்கின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டைப் பிரதேசத்தில் அதிகளவான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளதால், அவற்றில் பணிபுரிபவர்களும், சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தினந்தோறும் வருவோரும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இடையூறு ஏற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோட்டை பகுதியிலுள்ள கடைகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாகவும், எனவே இந்தப் போராட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...