மன்னாரில் யுத்தத்திற்கு பின் மீளக் குடியேறிய மக்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன!

Date:

யுத்தத்திற்கு பிற்பாடு மீளக் குடியேறியுள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டம் இன்று மன்னார் மாவட்டத்தின் எறுக்கலம்பிட்டி கிராமத்தில் கையளிக்கப்பட்டன.

பூரணத்துவம் அடையாத நிலையில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் கோரிக்கைக்கு அமைய  குவைட் நாட்டின் ஸகாத் ஹவுஸின் (Zakath House) நிதியுதவியோடு ISRC நிறுவனத்தின் அனுசரணையில் எறுக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேசனினின் (Zakath Foundation) பூரண ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தின் எறுக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்துக்கு அமைய முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 75 வீடுகள் இவ்வாறு கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு குறித்த வீடுகளை கையளித்தனர்.

இதேவேளை தலா 13 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்து வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரென்லி டீமெல், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் ஆர். சூரிய ஆராய்ச்சி, மன்னார் பிரதேச செயலகப் பிரதேசச் செயலாளர் எம். பிரதீப்,  நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஏ. மிஹ்லார்,  நாட்டின் இலங்கைக்கான தூதுவரின் இணைப்பாளர், மன்னார் பிரதேசச் சபைத் தலைவர், பிரதேசச் சபை உறுப்பினர்கள்  பலரும்  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...