மேலும் 5500 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய எலான் மஸ்க்!

Date:

ட்விட்டரின் ஊழியர்களில் மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எலான் மஸ்க் அதிரடியாக நீக்க உத்தரவிட்டுள்ளார்.

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை எலான் மஸ்க் ரூ.3.50 இலட்சம் (இந்திய ரூபா) கோடிக்கு சமீபத்தில் கையகப்படுத்தினார்.

இந்நிலையில், முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர்,  அடுத்தப்படியாக 50 சதவீத பணியாளர்களை வேறு வழியில்லாமல் வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதன் காரணமாக 3,788 பேர் தமது பணியை இழந்தனர்.

இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்த்க்கது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...