ரணிலின் போராட்டக் கதைக்கு சஜித்திடமிருந்து பதில்?

Date:

இந்த நாட்டு மக்கள் வீதியில் இறங்குவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை எனவும்,  மக்களின் உரிமைகளை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் செலவின தலையீடுகள் மீதான வரவு செலவுத் திட்ட குழு  விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் பொது மக்களின் போராட்டம் நியாயமானது எனவும், உண்மையான போராட்டத்தை குழப்ப வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இப்போராட்டத்தை ஜனாதிபதி குழப்பி வருவதாகவும், உண்மையான போராட்டக்காரர்களுடன் தாம் நின்று அவர்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...