‘வருட இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம்’

Date:

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதேநேரம் உள்ளூராட்சி தேர்தலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் காலம் தாழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை நிர்ணய குழு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஏதுவாக செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேல் நாடாளுமன்றமும் நீதிமன்றமும் காணப்படுகின்றது, எனவே எல்லை நிர்ணய குழுவின் ஊடாக உள்ளுராட்சித் தேர்தலை காலம் தாழ்த்த முடியும் என கூறுவதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும், அல்லது பெப்ரவரி இறுதி வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட வேண்டியது கட்டாயம் என்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...