2022 பிஃபா உலகக் கிண்ணம்: இஸ்ரேல் டெல் அவிவிலிருந்து டோஹாவுக்கான விசேட விமான சேவைக்கு கட்டார் அனுமதி!

Date:

கட்டாரில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையை முன்னிட்டு , முறையான தூதரக உறவுகள் இல்லாத இஸ்ரேல் மற்றும் கத்தார் இடையே நேரடி விசேட விமானங்கள் இயக்கப்படும் என்று ஃபிஃபா நேற்று தெரிவித்துள்ளது.

அதற்கமைய டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து டோஹாவின் ஹமாத் இன்டர்நேஷனல் வரை செல்லும் விமானங்களில் போட்டி டிக்கெட்டுகள் மற்றும் ஹய்யா ரசிகர் ஐடியை வைத்திருப்பவர்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை FIFA நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒன்றாக பயணம் செய்யவும் ஒன்றாக கால்பந்தாட்டத்தை கண்டு களிக்கவும் முடியும் என்று ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா பகுதியில் வசிக்கும் எந்த பாலஸ்தீனியர்களுக்கு இந்த அனுமதி பொருந்தும் என்று அந்த குறித்த அறிக்கை குறிப்பிடவில்லை.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீனிய டிக்கெட் வைத்திருப்பவர்களும் ஊடகங்களும் இந்த பட்டய விமானங்களில் எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்க முடியும்.

ஏனெனில் அவர்களுக்கும் போட்டியை கண்டு களிக்கும் சம உரிமை உள்ளது, என கத்தாரின் போட்டி ஏற்பாட்டாளர், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...