32 வருட வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் கொழும்புக்கு நடைபவனி!

Date:

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 32 வருடங்களாக தமக்கான நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்து நீண்டகாலம் காத்திருந்த நிலையில், தற்போது தமது பிரச்சினையை உரியவர்களிடம் நேரடியாக சொல்லும் நோக்கில் வடக்கிலிருந்து இரண்டு முஸ்லிம்கள் கால் நடையாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையை நோக்கி கால்நடையாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அஸன் குத்தூஸ், ஜார்தீன் ஆகிய இருவர் இந்த நடை பவனியை மேற்கொண்டுள்ளனர்.

2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி சங்குப்பிட்டி மன்னார் பாதையில் அமைந்துள்ள நாச்சிக்குடா பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் தற்போது நொச்சியாகம நகரை அண்மித்துள்ளனர்.

கொழும்பு வரை உள்ள வடமாகாண முஸ்லிம்களும் இவர்களுடைய பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் தமிழ், சிங்கள செயற்பாட்டாளர்களும், இக்கால்நடை பவனிக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள்.

முழுமையான தீர்வை எட்டும் வகையில் ஆணைக்குழு அமைத்தல், மீள்குடியேற்றம், நஷ்டஈடு, கல்வி, வளக்கட்டமைப்பு அபிவிருத்திகள், உரிமைகள், எல்லை நிர்ணய மோசடியாளர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குதல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந் நடைபவனி மேற்கொள்ளப்படுகின்றது.

இது தொடர்பான கட்சிகள்…

தகவல்: பாரூக் பத்தீன்,
சமூக செயற்பாட்டாளர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...