ஈஸ்டர் தாக்குலையடுத்து இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள ஆறு முஸ்லிம் அமைப்புக்களான தௌஹீத் அமைப்புக்களாக அறியப்படும், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (யூ.டி.ஜே.), சிலோன் தௌஹீத் ஜமாஅத் (சி. டி.ஜே.), ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.), அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ஏ.சி. டி.ஜே.). ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ். எம்.) மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ். எம்.) ஆகியவற்றின் தடைகள் நீக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ள 5 நிபந்தனைகளின் அடிப்படையில், இந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
1. அமைப்புக்கு நிதி திரட்டல், செலவு செய்தல் தொடர்பில் வெளிப்படைத் தன்மை பேணப்ப டுகின்றது என்பதை உறுதி செய்து வருடாந்தம், பாதுகாப்பு அமைச் சுக்கு அறிக்கை சமர்ப்பித்தல். பாது காப்பு அமைச்சு அது தொடர்பில் ஏதும் ஆலோசனைகள் வழங்கினால் அதனை பின்பற்றுதல்.
2. அமைப்புக்கள் முன்னெடுத்துச் செல்லும் கல்வி நிலையங்கள் தொடர்பில் முஸ்லிம் சமய கலா சார திணைக்களத்துக்கு அறிவித்தல், கல்வி அமைச்சு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அமைய அவற்றை முன்னெடுத்து செல்லல்.
3. வெளிநாட்டிலிருந்து நிதியினை பெற்றுக்கொள்ளும் போது, மத்திய வங்கி அங்கீகரித்துள்ள முறைமைகளின் கீழ் பெற்றுக்கொள்ளல்.
4. அமைப்பின் உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்புக்கு அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல். உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ளல்.
5. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும், இஸ்லாமிய தேசம் தொடர்பில் சமூக வலைத் தளங்களில் முன்னெடுக்கப்படும் பிர சாரங்களை முறியடிக்க எதிர் பிரச்சாரங்களை முன்கொண்டு செல்லவும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குதல்
குறித்த நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, குறித்த முஸ்லிம் அமைப்புக்கள் தடைகளை எதிர்த்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை, தடை நீக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் வாபஸ் பெற வேண்டும் என்பதும் முஸ்லிம் அமைப்புக்களுடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் (உளவுத் துறை அதிகாரிகள் ) முன்னெடுத்த கலந்துரையாடல்களின் போது நிபந்தனையாக முன் வைக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
இவ்வாறான நிலையில், நிபந்தனைகளுக்கு, தடையை நீக்கக் கோரிய 6 முஸ்லிம் அமைப்புக் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், மிக விரைவாக அது குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டு தடை நீக்கம் அறிவிக்கப்படவுள்ளது.
முன்னதாக நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொது மக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சியின் நலனில் அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்வதாக அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டு அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.