ரசிகர் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோ: 2 போட்டிகளில் விளையாட தடை!

Date:

ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட விவகாரத்தில் ரொனால்டோவுக்கு ரூ.50 இலட்சம் அபராதமும், 2 உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

கடந்த சீசன், பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் போது, எவர்டன் நகரில் ரசிகர் கையில் இருந்த செல்போனை வேண்டுமென்ற தட்டிவிட்டதற்காக 50 ஆயிரம் பவுண்ட் (ரூ. 49. 4 இலட்சம்) அபராதமும், கிளப் ஆட்டங்களில் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து இங்கிலாந்து கால்பந்து வாரியம் அறிவித்துள்ளது.

சமீபத்தில், ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார்.

இந்த தடை பிபா உலகக்கோப்பையில் செல்லாது. இதுகுறித்து இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஒரு சுயாதீன ஒழுங்குமுறை ஆணையம் அவரது நடத்தை முறையற்றது மற்றும் வன்முறையானது என அடுத்தடுத்த விசாரணையின் போது கண்டறிந்து, இந்தத் தடைகளை விதித்தது” என குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

மிச்சிகன் செனட் தேர்தல்: ஹேலி ஸ்டீவன்ஸை வீழ்த்தி அப்துல் எல்-சயீத் வரலாற்று வெற்றி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற அமெரிக்க செனட் சபைக்கான (US Senate)...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை வரும் 24 ஆம் திகதி..!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம்...

2029-க்குள் ‘மெட்ரோ பஸ்’ சேவை 500 ஆக உயர்த்த திட்டம்!

கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவாக்கம் செய்து,...

மஹர சிறைச்சாலை சேதங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைதிகளால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை...