தனுஸ்கவின் பிணைக்கு பணம் செலுத்திய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

Date:

தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது.

அத்தோடு, இந்த தொகைக்கு மேலதிகமாக பல உதவிகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஸ்க குணதிலக்க, வடமேல் சிட்னியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்,அவரது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டுள்ளதுடன், இரவு வேளையில் நடமாடவும், சமூக வலைத்தளங்கள் மற்றும் டிண்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தனுஸ்க 150,000 டொலர்கள் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...