EPF பணம் குறித்து வௌியான அதிர்ச்சியான செய்தி!

Date:

சில திட்டங்களில் ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ஹைட் கொழும்பு திட்டத்திற்கு 5,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்று வரை எவ்வித இலாபமும் ஈட்டப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, , 2021 டிசம்பர் 31 க்குள் “த பைனேன்ஸ் கம்பனி” யின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், நிதியம் 205.49 மில்லியன் ரூபாவை இழந்துள்ளது.

மேலும், பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்கு முதலீட்டில் 5,000 மில்லியன் ரூபா அதாவது 53%, 2013 இல் கென்வில் ஹோல்டிங் ஹோட்டல் வளாகத்தை நிர்மாணிப்பதற்காக திட்டமிடப்பட்ட நிலையில் ஹோட்டல் வளாகத்தின் கட்டுமானம் தொடர்பான கிரேன்ட் ஹைட் கொழும்பு திட்டத்தின் கட்டுமானம் 2020 இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும், ஹோட்டல் வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 2021 டிசம்பர் 27 க்குள் முடிக்கப்படவில்லை என்றும், 8 ஆண்டுகள் ஆகியும், முதலீட்டில் இருந்து நிதி எந்த பலனையும் பெறவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு புதிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கும், நிதியத்தின் உறுப்பினர்களுக்கு மீள் பதிவு செய்வதற்கும் 12.61 மில்லியன் ரூபா செலவில் 15,000 அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், இந்த அட்டைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன் 17.67 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 35 இயந்திரங்களில் 2 இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 33 இயந்திரங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...