இன்று இரவு முதல் சிற்றுண்டி உணவு விலைகள் குறைக்கப்படும்!

Date:

பாண் விலை குறைப்புக்கு அமைவாக இன்று இரவு முதல் சிற்றுண்டி உணவு வகைகளின் விலையை   குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி  ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மற்றும் மரக்கறிரொட்டி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்தின் கருத்துப்படி, கொழும்பு கோட்டையில் பருப்பு மற்றும் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தற்போது சந்தையில் போதுமான அளவு கோதுமை மா கையிருப்பு உள்ளதால், ரொட்டி மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலைகள் நேற்று இரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டால், மதிய உணவுப் பொதியின் விலையையும் குறைக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...