சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய உள்ளூராட்சி சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை!

Date:

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை உறுப்பினர் சசி ஹெட்டியாராச்சி நடத்திய இந்த போராட்டத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தங்கள் கட்சி இராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அரசாங்கம் சீனாவுடனான கடன் விவகாரங்களை இராஜதந்திர உறவுகளின் மூலம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் ரங்கே பண்டார கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு என்பது நிதி அமைச்சரின் பிரச்சினையே தவிர பிரதேச சபை உறுப்பினரின் பிரச்சினை அல்ல என்றும் பிரதேச சபை உறுப்பினரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கட்சி விரைவில் தீர்மானிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைக்குமாறு சீனாவைக் கோரி கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...