துறைமுகத்தில் இருந்து பால் மாவை, விநியோகிக்க சுங்கத் திணைக்களம் தடை?

Date:

பாரிய தொகை பால் மாவை, துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற, சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பால் உணவு இறக்குமதியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், லக்ஷ்மன் வீரசூரியவினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், விரைவில் வெளியிடப்படும் விபரங்கள் எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளித்த சுங்கத் துறையினர், விசாரணையின் காரணமாக பால் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக, சுங்கம் மற்றும் துறைமுகம் ஆகியவை சட்டவிரோதமாக பால் மா கையிருப்புகளை தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் நாட்டில் பால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் வீரசூரிய குற்றம் சுமத்தியிருந்தார்.

இதேவேளை சுங்கத்திணைக்களத்தின் அலட்சியப்போக்கினால் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. இறக்குமதி 50 சதவீதத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா காலாவதியானதன் பின்னர் கால்நடைகளுக்கான தீவனமாக வழங்கப்படுகின்றது.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...