பசில் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதன் காரணம் வெளியானது!

Date:

ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பேசிய இராஜாங்க அமைச்சர், எந்தவொரு தனிநபருக்கும் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து SIS தீர்மானிக்கிறது என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்.பியாக இல்லாத போது அவருக்கும் இதற்கு முன்னரும் இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது, இது SIS எடுத்த தீர்மானம் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

பசில் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் தேசிய அமைப்பாளர். எனவே, அத்தகைய நபருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவது பாதுகாப்புப் பிரிவினரின் பொறுப்பாகும் என்றார்.

பசில் ராஜபக்சவின் குடும்ப உறவுகள் மற்றும் அவருக்கு எதிரான பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக அவர் இலங்கை வந்ததைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்ததாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அவர் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் சகோதரர், ஒரு அரசியல் கட்சியின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர், மற்றும் அவருக்கு எதிராக பல்வேறு துறைகளில் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இது நடந்ததாக எஸ்எஸ்பி தல்துவா கூறினார்.

அண்மைய அரசியல் ஸ்திரமின்மையின் போது விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல வாகனங்கள் அனுமதியற்ற நபர்களால் இடையூறு செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும், எனவே இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை செயல்பட்டதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...