‘பாடசாலை மாணவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்’

Date:

பாடசாலை மாணவர்களுக்கு வழமையை விட அதிகமாக உணவு கிடைக்காத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஒரு பிரிவினருக்கு மதிய உணவு வழங்கப்படுவதாகவும், நிதியத்தை நிறுவி அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முழு நாட்டிலும் பாடசாலை மாணவர்கள் உணவுப் பிரச்சினையை எதிர்கொள்வதால் அவர்களுக்கு மதிய உணவை தாமதமின்றி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் அரசாங்க செலவினத்தை அதிகரித்துள்ளதால்இ இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பணத்தை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...