பிரான்ஸ் பயண முகவர்கள் குழு இலங்கைக்கு….!

Date:

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 80 பிரான்ஸ் பயண முகவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று (21)  இலங்கை வந்தடைந்தனர்.

கண்டி, பெந்தோட்டை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்று இந்தப் பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் அமைப்பை அவதானித்த பின்னர், இக்குழுவினர் பிரான்சிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க உள்ளனர்.

இந்த பயண முகவர்கள் குழு காலை 07.25 மணியளவில் பிரான்சின் பிராங்போர்ட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் குழுவை வரவேற்பதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சுற்றுலா ஹோட்டல்கள், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சேவை நிறுவனங்கள் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...